அன்பின் தீபச்செல்வன் அண்ணா அவர்களுக்கு,
தற்போதுதான் 'நடுகல்' நாவல் படிக்க முடிந்தது. வினோதனின் குடும்பத்தையும், அவர்களின் சுற்றத்தையும் மையமாக கொண்டு கதை நகர்கிறது. ஆள் இல்லா இடங்களில் புகைப்படங்கள் மட்டுமே நினைவுகளை மீட்டுகின்றன. இந்த நாவலில் புகைப்படங்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன.
தமிழீழ உரிமை போரில் இலங்கை ஆமியின் கோர முகங்களையும், இயக்கம் மக்களுக்கு எவ்வாறு பங்காற்றியது, மக்கள் இயக்கத்திற்கு எவ்வாறு ஆதரவு தந்தனர் என பல விடயங்களை அறிய முடிந்தது.
மேலும் புத்தகத்தை படிக்கும்போது போர் சூழலில் தமிழீழ மக்கள் அனுபவித்த இன்னல்களை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.
இலங்கை அரசு மக்களை கொன்றது மட்டுமில்லாமல் தமிழீழ உரிமைக்காக போராடிய வீரர்களை பயங்கரவாதிகள் என்பதும், மாவீரர் துயிலும் இல்லங்களைஅழித்தொழிப்பதும், போருக்கு பிந்தைய ஆக்கிரமிப்புகள் என இந்நாவல் இலங்கை பேரினவாதத்தை தோலுரித்து காட்டுகிறது.
'நடுகல்' நாவலை ஒரு வரலாற்று நூலாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துகளும் நன்றியும் அண்ணா..
முனிராஜி
14-06-2019
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக