எனக்கு பிடித்தமான என்னை பாதித்த நூல்களுக்கு விரிவான விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஆனால் நடுகல் நூல் வெளியானதும் வாசித்தும் கூட நான் அதைப் பற்றி அப்போது எழுதவில்லை.
எழுதுடா என்றான் தீபன். தைரியம் இல்லடா என்றேன். தீபனுடைய அண்ணனின் ஏக்கத்தை நன்கு அறிவேன். இரவு நேரத்தில் அந்த நூலை படித்து தேம்பி தேம்பி அழுது, விமர்சனம் எழுத குறிப்பெடுக்க மீண்டும் வாசிக்க கூட எனக்கு தைரியம் வாய்க்கவில்லை.
பொதுவாக கதைகள் என்பது பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லக்கூடியது. ஆனால் இந்த நாவலில் ஒரு குழந்தை நமக்கு கதை சொல்லுகிறது. அதுவும் போர்சூழலில் அகப்பட்ட குழந்தை தன்னுடைய ஏக்கத்தை சொல்கிறது.
தீபச்செல்வனின் நடுகல் சிலப்பதிகாரம் போன்றது. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம், மதுரை காண்டத்தோடு கதை முடிகிறது. அடுத்து வரும் வஞ்சி காண்டம் என்பது இளங்கோவின் அரசியல்.
அதுபோல நடுகலில் அண்ணன் வீரச்சாவோடு கதை முடிகிறது. அடுத்து எழுதிய ஐம்பது பக்கங்கள் தீபச்செல்வனின் அரசியல். இன்றைய சூழலில் தாம் யார் பக்கம் நின்று பேசுறோம் என்று சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்காக அவன் கதை முடிந்து அந்த ஐம்பது பக்கங்களை எழுதி இருக்கிறான்.
இதை எழுதக்கூட மீண்டும் நூலை புரட்ட மனமும் தைரியமும் வரவில்லை. தீபச்செல்வன் அண்ணன், வெற்றி அக்கா, தமிழ்நதி அக்கா போன்றோர் தொடர்ந்தும் சோர்வடையாமல் எழுத வேண்டும்.
-சரவணகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக