நடுகல். ஒரு விடுதலைபோரின் பின்னணியில் வாழ்ந்த எளிய மக்களின் உணர்வுகளை உயிரோட்டமாகவும் உண்மையாகவும், எந்த பிம்பப்படுத்தலும், மிகைப்படுத்தலும் இல்லாமல் இரத்தமும் சதையுமாய் படிக்க நேர்ந்தது சிறந்த அனுபவமாயிருந்து. தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இயக்கத்தில் பிள்ளைகள் இருக்கும்போது தாய்மார்கள் படும் அல்லல். கடும்போர் சூழலிலும் சிறுவர்களின் கல்வியை பிரதானப்படுத்தும் போராளிகள்/ இயக்கம், அமைதி காலங்களில் ஈழ மக்களின் எளிய வாழ்க்கை முறை இவை யாவும் தமிழக இளையதலை முறையினருக்கு ஈழம் குறித்த புதிய பார்வையை இந்த நாவல் நிச்சயம் கொடுக்கும்.
நடுகல், தவிர்க்க கூடாத, முடியாத ஈழ இலக்கிய நூல்களில் ஒன்று.
தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்
-ஆரோக்கிய தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக